Saturday, December 2, 2023
மருதூர் ஜமால்தீன்
Monday, September 18, 2023
நூலில் உள்ள மேலும் சில...
குறும்பாக சில குறும்பாக்கள்
எப்.எம். கொலைவரிசை
ஹெல்லோ நான்தான் சூப்பர் எப்எம்
ஹல்லோவ் உங்கள் குரலோ செப்பம்
ஹீஹீஹீ நலமாண்ணா..?
ஹாய்.. சாப்பிட்டீங்களாம்மா..
ஹீ..ஹீ..அடிச்சேன்ணா ரெண்டு அப்பம்.
யுhர்யாக்கெல்லாம் வேணும் பாட்டு
யுhரெல்லாம் இருக்கிறீங்க கேட்டு
யாபேரின் பெயர்சொல்லி
யார்க்கணக்கில் வெறுப்பேற்றி
யுரோவில் கரையுது ரீலோட்டு
சேர் உங்க குரல் நம்பர் வண்ணு
சீ..ய்..புகழ்ந்தால் பட்டுவிடும்கண்ணு
செல்லமாய்ச் சிணுங்காதீங்கோ
சிரிக்காதீங்கோ கணவர்
செவியில் விழுந்தால் வாயில் மண்ணு
எஸ்.பிபி. பாட்டொன்று கேட்டன்
ஏஆர்ரஹ்மான் மியுசிக் போட்டேன்.
ஏன்குரலா அவர்குரலா
எவரதுமக் குப்பிடிக்கும்
ஏய்..சீய்.. அதை நான் சொல்ல மாட்டேன்.
ஊடகத்தில்தானித்தனை சேட்டை
உதவாது விளாசவேண்டும் சாட்டை
உன்னதமாம் கருத்துக்கள்
உயிர்உருகும் .இசைபற்றி
உறவாடிப்பகிர்ந்திடுவோம் பாட்டை..
000
மண்ணாசை வெறுத்த புத்தர்
மானுடம் போதித்த சித்தர்
மாதவன் சொல்லவில்லை
மதவெறி பிடித்தவர்
மலையிலேற்றி வைத்தார் பித்தர்.
000
பார்ப்பதற்கு பளபளக்கும் பல்லி முட்டை
போலிருக்கும் பலவர்ணம் பல்லி மிட்டாய்
பல்லிருப்போர்க்கு பரவசம் தரும்
பள்ளிக் காலம் நினைவில் வரும்
பள்ளித் தோழியுடன் பகிர்ந்துண்ட பல்லி முட்டாய்
000
டகர டகர டக்கு டக்குf; கொத்து
கொத்துறவன் பார் என்னா கெத்து
ஊத்த உடுப்பும் உப்பும்
வேர்த்த கையும் வெக்கையும்
சேர்த்துக்கொத்து தின்போம்kpfr; சத்து ?
000
எண்ணத்தில் தோய்த்தெடுத்தாள் தூரிகை
என்னையே வரைந்தாள் இக் காரிகை
எண்ணங்கள் இதயத்தில்
வண்ணங்கள் ஆகிடும்
என்னவள் என்றே கொட்டும் பேரிகை
000
குறும்பாக சில குறும்பாக்கள்
தூது-நீங்களும் எழுதலாம்- புபாளம்-கொக்கூர்கிழான்..
கருணை
காவி மொட்டை பஸ் ஒன்றில் ஏறி
கடிந்தார் நான் குரு என்று கூறி
குருமாருக்கு மட்டுமதில்
குந்தி வந்த முடவனெழ
கருணை அமர்ந்தார் தம்மம் மீறி.
துர்-அதிர்ஷ்டம்
விழுமென்றே நம்பியொரு கோடி
விழுந்தெடுத்தார் லொத்தரைத்தான் நாடி
விழவில்லை ஒருநாளும்
விழாதென்று கிழித்து வீசி
விட்டடெறிந்ததில் இருந்ததிரு கோடி
ஒரு(க்)கால்உ?;
சீற்றின் கீழ் தன்கால் விட்டார்
சீற்றின் முன் பெண்கால் தொட்டார்
சோக்காகத் தடவிவிட்டார்
சேருமிடம் வந்தபின்னே
செயற்கைக்கால்- மிரண்டு விட்டார்.
மறி-யல்
விற்க வந்தாள் ஒரு சிறுமி பிட்டு
வந்தவளைத் தனியறைக்குள் விட்டு
வளர்த்தாட்டி விளையாடி
வம்புசெய்தார் கிழட்டப்பா
விளக்கமறியலில்; கிழவன் மாட்டு.
சுய(நல)சரிதை
எத்தனையோ புத்தகங்கள் போட்டேன்
எவர்தலை கட்டி காசு சேர்த்தேன்
எவரேனும் நூலொன்று
எழுதியுள்ளேன் எடுங்களென்றால்
என்பணமீந்து வாங்க மாட்டேன்.
ஆ..! வேஷம்
தாடிஜிப்பா தலைப்பாகை தொப்பி
ஆடையெல்லாம் அத்தர் அப்பி
தங்கியிருந்தார் பள்ளித்
தொண்டு; செய்தொரு நாள்
உண்டியலுடன் போனது ஆள் தப்பி
இணை-யம்
பிள்ளைக்குப் படிக்க இன்டர் நெட்டு
பு{ட்டினர் கொம்பியுற்றர் கடன் பட்டு
பேஸ்புக்கில் சட்டடித்து
பாஸ்போட்டும் முடித்தெடுத்து
பறந்தாள் பெற்றோரைக் கை விட்டு.
கிறீஸ்மேன்
எங்கிலுமே கிறீஸ்மேன்தான் பேச்சு
எல்லோரும் வீடடங்க ளாச்சு
எத்தனிவன் ஏகலைவன்
ஏறிக் கூரைபிரித்து
எடுத்துச் சென்றான் கோழி போச்சு
தொண்டு
சுனாமியினால் விழுந்தசவம் கண்டார்
செய்ய வந்தார் புனிதமிகு தொண்டார்
சவக்குழிகள் தோண்டியவர்
சவம் புதைக்கும் போதந்தச்
செவி கழுத்து நகையுருவிக் கொண்டார்.
குறுஞ்செய்-தீ
எஸ்எம்எஸ் அனுப்புகிறாள் பாட்டி
எட்டிப் பார்த்தான் பேரன் சூட்டி
எதிர்வீட்டுக் கிழவருக்காம்
எத்திவைத்தான் பாட்டனிடம்
எழுபது வயதில் மணவிலக்கு நோட்டீஸ்.
ஏறுமலை
மண்ணாசை வெறுத்த புத்தர்
மானுடம் போதித்த சித்தர்
மாதவன் சொல்லவில்லை
மதவெறி பிடித்தவர்
மலையிலேற்றி வைத்தார் பித்தர்.
பல்லிமிட்டாய்.
பார்ப்பதற்கு பளபளக்கும் பல்லி முட்டை
போலிருக்கும் பலவர்ணம் பல்லி மிட்டாய்
பல்லிருப்போர்க்கு பரவசம் தரும்
பள்ளிக் காலம் நினைவில் வரும்
பள்ளித் தோழியுடன் பகிர்ந்துண்ட பல்லி முட்டாய்
கொத்து
டகர டகர டக்கு டக்குக் கொத்து
கொத்துறவன் பார் என்னா கெத்து
ஊத்த உடுப்பும் உப்பும்
வேர்த்த கையும் வெக்கையும்
சேர்த்துக்கொத்து தின்போம்மிகச் சத்து ?
புகழ்ச்சி
இனத்திற்காய் புரிந்த நற் சேவை
இருக்கையில் புகழ்வதுவே தேவை
இருக்கையில் மறந்தே போய்
இறந்தபின் புகழ்வோர்சிலர்
இழுத்துப் பிடுங்குஅவர் நாவை.
வாழ்-கை
வாழும்போதே வாழ்த்துவதே நன்மை
வேண்டுமெனச் சொல்லுகிறோம் உண்மை
வாழ்கையில் மறந்துவிட்டு
வாழ்ந்தபின்னே சிலை வைத்தே
வணங்குதலை எதிர்த்திடுவோம் வன்மை.
மெம்பர்
கிணற்றுத் தவளையவர் துள்ளி
கணக்கின்றி செலவழித்தார் அள்ளி
காசுபணம்.. ஆயினுமவர்க்கு
கிடைத்தது ஏழு வோட்டு
கந்தறுந்து போய்ப்படுத்தார் எள்ளி
அன்பு அளிப்பு
அமைச்சில் செயலாளர் உள்ளார்
அகடம் செய்வதில் வல்லார்
அவருக்கு அன்பளிப்பு
அகலமான என்வலப்பு
அளித்தால் எக்காரியமும் வெல்வார்.
புண்ணியப் பயணம்.
புரட்டிப் பணம் சேர்த்து வெச்சு
புண்ணியம். புறப்பட்டார் ஹஜ்ஜ-
பணமிருந்தால் ஹாஜியாராம்
பிணமானால் நேரே சொர்க்கமாம்
பத்துக்குமர் பக்கத்து வீடோ குச்சு.
ஏகமும் நானே
தமிழரின் ஏகதலைவன் நானே
தரணியெலாம் தனிஆளாய் தானே
தமிழரசு ஆள்வேனென்று
தலைக்கணம் தழைத்ததால்
தமிழீழப்போர் போனது வீணே.
பாடு-பட்டு.
கனடாவாழ் காதலருக்கும் பாட்டு
கண்டறியா நேயருக்கும் கேட்டு
கலகலவென கதைத்திருப்பார்
கலையுலக நண்பர்களாம்
காசுகரையுது கடனுக்கு ரீ லோட்டு.
எம்பி எம்பி
தேர்தலில் குதித்தார் எம்பி
தேனொழுகப் பேசினார் தம்பி
தேர்தலில் வென்று
தேவைப்பட்டதைச் சுருட்டி
தேசம்விட்டு நீட்டினார் கம்பி.
நடுநிசிநாய்கள்
நக்குத் தின்னும் நாய்கள்
நக்கல் பின்னும் வாய்கள்
நல்லவராய் நடித்து
நண்பரை நயவஞ்சிப்பர்
நரகலைத் தின்னும் பேய்கள்..
பெப்பே
கன்னிக்கும் சேர்த்தெடுத்தார் டிக்கற்
காசென்று பாராமல் பொக்கற்
கன்னி பக்கத்தமர்ந்து வரக்
கனவு..கடைசி நிமிடம்
காக்காவுடன் வந்தமர்ந்தாள் பெப்பற்.
தொலைகள்
தொலைபேசி அலுவலகத்தில் அப்பா
தொலைக்காட்சி நாடகத்தில் அம்மா
தொலைதூரத்தில் அண்ணா
தொலைநகல் காரனுடள்
தொலைந்து போனாள் மகள் யம்மா.
ஓட்டோ
ரோட்டெல்லாம் ஓடுகின்ற ஓட்டோ
ராமுழுக்கச் சத்தம்தான் கேட்டோ
ரம்பமெனக் காதுகளில்
ரொம்பத்தான் அறுத்தாலும்
ரேட்டெல்லாம் குறைந்திடவே மாட்டா..
சீனி-யர்
சீனி கொழுப்பு பிரசர் கூட
சீனியப்பா கையில்ஊசி போட
சீக்கிரமே போய்விட்டால்
சிறந்ததடா எனச் சொல்லி
சின்னவீடு சென்றார் ஆட..
யுத்தம் நித்தம்
இறுதியாய் ஓய்ந்தது யுத்தம்
இல்லை துப்பாக்கிச் சத்தம்
இனிநிம்மதியே என்றெண்ண-
இந்நாட்டில் வாழ உமக்கு
இடமில்லை என்றார் தேரர் பௌத்தம்.
ஆட்டா-டாட்டா
மகள் பள்ளிக்குச் செல்ல ஆட்டா
மகள் ரியுசனுக்குப் போகவும் ஆட்டா
மாதமிரண்டு கழிந்திட
முச்சக்கரச் சாரதியுடன்
மகள் காட்டி மறைந்தாள் டாட்டா..
மர்மப் புகழ்;
இவ்விலக்கிய இதழ்தான் சூப்பர்
இன்சொற் புகல்வார் டாப்பர்
இதிலொரு விஷயம்
இவ்விதழில் இவர்கவிதை
இருக்கிறதே..அதுதான் பார் பேப்பர்.
ஊவ்..டகங்கள்
ஊடகங்களில்தான் எத்தனை சேட்டை
உதவாக்கரை களின்புளுகு மூட்டை
உன்னதமான கருத்தில்லை
உயர் நல் எண்ணமில்லை
உதவாது வீச வேண்டும் சாட்டை
எ.... டிட்டர்
பெண்களின் கவிதைதான் சுப்பர்
பெண்ணியல் கவிஞர் இந்த மப்பர்
பத்திரிகையிற் போட்டுடன்
பஸ்ஏறித் தேடிப்;போய்
பல்லிளிக்கும் பேர்வழி எ டிட்டர்.
நூலானார்
புத்தகச்சுச்; செலவுஒரு பக்கம்
பிரதியனுப்பிய தொகைமறு பக்கம்
பிரதிகள் ஓசியில் போக
பிரட்டி எடுக்க வழியின்றிப்
போனது கைமோதிரம் ரொக்கம்.
கொள்ளி
இலக்சனில் குதிக்கின்றார் துள்ளி
இலட்சங்கள் வீசி வாக்குகள் அள்ளி
இனி-யார் காலிலும் விழுந்து
எம்பிக் குதித்து எம்பியாகி
இவர் வைப்பார் சமுகத்துக்குக் கொள்ளி.
நல்லாட்சி
எந்தக் கட்சி ஏறிடும் பீடம் ஆட்சி
அந்தக்கட்சியில் மாறும் காட்சி
எக்கேடு கெட்டாலும்
எவர்தாலி அறுத்தாலும்
எம்பிஆவதே எங்களவர் மாட்சி
ஓவியம்.
எண்ணத்தில் தோய்த்தெடுத்தாள் தூரிகை
என்னையே வரைந்தாள் இக் காரிகை
எண்ணங்கள் இதயத்தில்
வண்ணங்கள் ஆகிடும்
என்னவள் என்றே கொட்டும் பேரிகை
ஹர்த்தால்.
மனிதர் சகலருமறிக இத்தால்
மாதத்தில் நான்கைந்து ஹர்த்தால்
மண்சமரில் இறந்தாலே
மறுயுகமது பிறந்தாலே
மண்ணிலில்லை மானுடம் போர்ப் பித்தால்
தலைக்-கவி
தமைமிஞ்சிய கவிஞர்கள் இல்லை
தாமே தமிழிலக்கிய எல்லை
தகுதியுடன் நினைப்பவரும்
தருவதுவோ மிகச் சொத்தை
திண்ணமிது நம் வெறுப்பின் எல்லை.
தீ-ரன்
இக்குறும்பாக் களினரசன் தீரன்
இருக்கின்றேன் சாய்ந்தமரு தூரன்
இத்தொப்பி யார்க்கெல்லாம்
இணக்கமானால் அணிந்திடுக
இதற்குமேல் பேச்சில்லை வாரன்.
0000000000000000000000000000000000000000000000000000000
எப்.எம். கொலைவரிசை
ஹெல்லோ நான்தான் சூப்பர் எப்எம்
ஹல்லோவ் உங்கள் குரலோ செப்பம்
ஹீஹீஹீ நலமாண்ணா..?
ஹாய்.. சாப்பிட்டீங்களாம்மா..
ஹீ..ஹீ..அடிச்சேன்ணா ரெண்டு அப்பம்.
யுhர்யாக்கெல்லாம் வேணும் பாட்டு
யுhரெல்லாம் இருக்கிறீங்க கேட்டு
யாபேரின் பெயர்சொல்லி
யார்க்கணக்கில் வெறுப்பேற்றி
யுரோவில் கரையுது ரீலோட்டு
சேர் உங்க குரல் நம்பர் வண்ணு
சீ..ய்..புகழ்ந்தால் பட்டுவிடும்கண்ணு
செல்லமாய்ச் சிணுங்காதீங்கோ
சிரிக்காதீங்கோ கணவர்
செவியில் விழுந்தால் வாயில் மண்ணு
எஸ்.பிபி. பாட்டொன்று கேட்டன்
ஏஆர்ரஹ்மான் மியுசிக் போட்டேன்.
ஏன்குரலா அவர்குரலா
எவரதுமக் குப்பிடிக்கும்
ஏய்..சீய்.. அதை நான் சொல்ல மாட்டேன்.
ஊடகத்தில்தானித்தனை சேட்டை
உதவாது விளாசவேண்டும் சாட்டை
உன்னதமாம் கருத்துக்கள்
உயிர்உருகும் .இசைபற்றி
உறவாடிப்பகிர்ந்திடுவோம் பாட்டை..
00
புதிய பிரசவம்.
பாரினையே இனக்கலவரம் மூடும்
பத்திரிகைச் சுதந்திரங்கள் ஓடும்
புதுப்புரட்சிக் கருத்துக்களையே
பிரசவிக்க மிகத் தடைகளும்
படைப்போர் மனங்களிலே ஆடும்.
புதுப்புதுவாய்ப் பிரசவிக்க ஆசை
பொங்கிடினும் புரட்டுவதோ தோசை
பேனாக்கள் தூங்கிப் போய்
பிடிப்போரும் ஏங்கிப் போய்
பிரசவங்களின் நலம் காண ஆசை
இப்போதான் எழுதுகிற பிள்ளை
இலக்கியத்தில் வளருகிற கிள்ளை
இடிபோல எழுத்துக்கள்
இனிய புதுக்கருத்துக்கள்
இருந்துமென்ன இறுக்கம் தானில்லை
அழியாவிலக்கியங்கள்தான் தேவை
அருந்தமிழுக்காற்றும் நற் சேவை
ஆக்கவிலக்கியக்காரரர்
அகிலப்புகழ் பெற்றுயர
அரைக்கக் கூடாதரைத்த மாவை.
(தூது- கவியிதழின் ஆசிரியர் தலையங்கம்)
00
உள்நாட்டு யுத்தம்.
வட-கிழக்கில் நாள்தோறும் குண்டு
விழுமுயிர்க்கு ஒரு கணக்கா உண்டு
விடுதலைப் புலி சுடும் வேட்டை
விழுங்கிவிடும் நாட்டை
வெளியேறுமா அமைதிப்படை என்று..?
தென்திசையிலும் துப்பாக்கி வேட்டு
திணறாதா மானுடமது கேட்டு?
திசையெல்லாம் ரத்தம் பார்
திரும்புமிடம் சத்தம் வீர்.
துட்டகைமுனுக்கும் உரிமைப் பாட்டு
தினந்தோறும் துப்பாக்கிச் சத்தம்
தீநரகில் மானுடங்கள் தத்தம்
தீய்ந்துவிடும் உயிருடமை
திரும்பாதா சமாதானம்
தீராதா உள’நாட்டு யுத்தம்?
ஓற்றுமையாயப் பேச்சொலிக்கும் காலை
ஒருகுண்டு வெடித்திடுமோர் மூலை
ஒப்பமிட்டோர் ஓடியொழிய
ஒருகணத்தில் குழம்பிவிடும்
ஓலமிட்டழும் மனமெல்லாம் பாலை
புதிதாயொரு புரட்சி துளிர்விட்டு
புத்துவருகிறது புதுப் பெயரிட்டு
புல்புல்கள் வான்மேவி
பரல்நெருப்பு நாகாவி
போராடத் தாம்வரும் புறப் பட்டு
நுpம்மதியாய் வாழத்தான் ஆசை
நீதியிப்போ என்னவிலை வீசை
நேர்மைகள் செத்துப்போய்
நம்பிக்கை அற்றுப் போய்
நிலைக்காதா ஐக்கியமணி ஓசை..?
ஏவ்வினத்திலும் ஒற்றுமைச் சேர்வு
ஏற்படவேண்டுமொரு புதுத் தீர்வு
ஏட்டிலக்கியம் செழித்திடவும்
ஏக்கலையும் வளர்ந்திடவும்
எழுதிடல் வேண்டும் ஐக்கியத் தேர்வு
நிச்சயமாக புலரும் புதுக் காலை
நற்கவிமழை பொழிந்திடவெடு கோலை
நாளைய யுகவிடியல்
நமதென்றே கோஸித்து
நீட்டிடுவோம் எழுதியொரு ஓலை.
துப்பாக்கியைப் பேனாவாய் மாற்று
ஓற்றுமையை அதற்குள்ளே ஊற்று
துர்ப்பாக்கியம் ஒழிந்தோட
தூயதமிழ்க் கவிதையெழுதி
தூது வரும் என்றுலகில் சாற்றுஉ
(தூது- கவியிதழின் ஆசிரியர் தலையங்கம்)
௦௦
மண்ணாசை வெறுத்த புத்தர்
மானுடம் போதித்த சித்தர்
மாதவன் சொல்லவில்லை
மதவெறி பிடித்தவர்
மலையிலேற்றி வைத்தார் பித்தர்.